பறவைபோல காதல்
கரைதேடிப்பறக்கிறது
சிறகொடிந்த இந்த உயிர்....
'உன் இதழுக்கு மட்டும் ஏன்
அத்தனை சிவப்பெழில்?
உதட்டுச்சாயத்துக்கு என்
உதிரத்தை பூசிக்கொண்டதாலா...? '
முற்றும் துறந்து
உன்னையே தன்
முற்றமெனச் சுற்றுகிறது
என் உயிர்...
தேடலில் தொலைந்தது என்
கிழமைகள் - வறட்டுக்
கிழமாய் என்னை
அடையாளப்படுத்திக்கொள்கிறது
வெற்றுக் கிழமைகளாயே
தொலைக்கப்பட்டுவிட்டது
முற்றுப் பெறாத என் இளமை...
உயிர் இன்னமும்
உன்னையே சுற்றி
உயிர்ப்பிழந்து போனது...
கண்ணீர் என்னுள்
கவிதைகளைக் கிளறுகிறது
உன்னில் நான்
தொலைந்து போன
வினாடிகளை மீட்டெடுக்க
முயல்கிறது...
வேட்கையில் தொலைந்துபோன
வேதனைக் கிழமைகளை....
எவ்வளவு முயற்சித்தும்
உன்னிலிருந்து என்னை
மீட்க முடியவில்லை....
நீ பல்லவி -
நான் சரணம்
உன் கரணம் தப்பும்போது
நான் மரணம்...
என்னை
அச்சு பிசகாமல்
மீட்டி வைத்திருக்கிறாய்...
நரம்பறுந்த பின்னும் - உன்
நாதம் தொடர்கிறது....





