பகலில் பதட்டமிற்றிப்
பரிகசிக்கும் நீ
கண்ணிறைந்த பயத்துடன்
உறைவிடம் தேடி
ஓடிவருகிறாய்...
இரவில் கனவாக...
என் காதலைச்
சோதிக்க நினைக்கும்
உன் நினைவலைகள்
மெள்ளமாய்
கண்களை நிமிண்டித்
திறந்துபார்க்கிறது...
உள்ளுக்குள் நீ
ஒளிந்திருக்கிறாயா என்று...
சந்தேகம் ஏன்..?
என் நினைவுகளுக்குள்
வேறுஎதைப் புதைத்து
அழகுபார்க்க முடியும்
உன்னைத் தவிர....
உறங்கும் போதும்
உயிருக்குள் உன்னை
உயிர்பித்து என்னைச்
சோதித்துப்பார்க்கிறது
இந்தக்கனவு...
வேறு எதை வைத்து
என் காதலை
அளந்து பார்க்க முடியும்
உன்னை நினைத்தால்
அழையாமலேயே
என்னுள் பூக்கும்
சில துளி
கண்ணீரைத் தவிர...
என்னிச்சை கேளாமல்
அன்னிச்சையாய்த் தோன்றி
உன்னிச்சை மேம்பட...
தன்னிச்சையாய்
உனை அழைத்துத்
தன்னை மகிழ்வித்துக்
கொள்(ல்)கிறது கனவு..
உறங்கும்போதும்
என் கனவு
காணும் கனவு
நீ....


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக