காதல் பிரபஞ்சத்தில்
உன் அபரிமிதமான
ஈர்ப்புவிசையில் சிக்கித்தான்
இயங்கிக்கொண்டிருகிறது
இந்த இதயம்....
உன் ஈர்ப்புவிசை நேர்த்தியானது. ..
சுற்றும் என் இதயத்தைச்
சூடாக்கி அழகுபார்க்கிறது...
இறக்கை முளைத்த
பறவையென உன்
ஈர்ப்புவிசை விலகிப்
பறக்க எத்தனிக்கிறேன்....
நீயோ என்னைப்
பித்தனாக்கி சிரிக்கிறாய்...
உன்னிலிலேயே
ஒழிந்துபோக மனமற்று
உன்னிலிருந்து விலகியோட
ஒளியும் இடம் தேடிப்
பறக்கிறேன் - நீயோ எங்கும்
ஒளிவீசித் தகர்க்கிறாய்...
எங்குசென்று ஒளிந்தாலும்
அங்கும் வந்து என்னை
அலைக்களிக்கிறாய் - நீ
அதில் களிக்கிறாய்...
உன்
பெண்மைக்கு பயந்து
உண்மைக்குள் ஒளிந்தேன்..
பொய்ப்பிம்பமாய் என்னை
உலரவைத்தாய்...
விண்ணில் ஒளிந்தேன்
நிலவாய் வேவுபார்த்து
நிதர்சனம் களைத்தாய்...
மண்ணுக்குள் ஒளிந்தேன்...
மானுடம்பின் உயிராய்..
மண்ணில் வேரூன்றியே
காணுலகின் மரமாய் நீ....
இருளுக்குள் ஒளிந்தேன்..
வெளிச்சமாய் உருமாறி
மருளவைத்தாய்...
இரக்கமற்ற இரவுக்குள்
உறக்கமற்று ஒளிந்தேன்..
அதிகாலை அழைப்பிதழாய்..
சுதிசேர்த்து நின்றாய்...
ஒலிக்குள் ஒளிந்தேன்
இசையாய் இசைந்தாய்...
விழிக்குள் ஒளிந்தேன்
பாவையாய் ஒளிப்பித்தாய்....
தமிழுக்குள் ஒளிந்தேன்
கவிதையாய்த் தீண்டினாய்
தெவிட்டாது தித்தித்தாய்...
எங்கெங்கோ ஓடி
ஒளிய இடம்தேடினேன்...
எங்கும் நிறைந்து
ஒளிவீசி நின்றாய்...
இனி எனக்கு
வேறு வழியென்ன இருக்கிறது...?
இனிய கவிதை
வேறு எங்குசென்று
ஒளிய முடியும்...
தமிழைத்தவிர....???



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக