கிழித்துத்தான் எறியமுயல்கிறேன் ...
என் முகம்
எனக்கே மறந்துபோனது...
ஒட்டிவைக்கப்பட்டிருக்கிறது
உன் முகம்
என் முகமூடியாய்....
பயணக்களைப்பு என்னுள்
கண்ணயருவதில்லை.. உன்.
நயங்கள் நினைவிலாடி
கண்ணயர விடுவதுமில்லை...
உன் சுமைகளைச் சுமக்கவேண்டி
உனக்காகவே ஏற்றப்பட்ட
லாடம் சுமையாக
பாடம் படிக்கிறது புத்தி...
சுமக்கவியலாது இந்த
முகமூடியைச் சுமக்கிறேன்...
நமநமத்து வியர்த்து வடிந்து
நமநமத்து வியர்த்து வடிந்து
முகவரி தொலைந்து திரிகிறேன்...
கல்லடி படாமல்
பாதம் பாதுக்காக்க - இந்த
முள்ளடி படுகின்றேன்...
உனக்கான சுமையை ஏற்றி
இன்பித்துக்கொள்... உன் மகிழ்ச்சியில்
எனக்கான வாழ்நாள்
துன்பத்தோடு இன்பமாய்...
சுமை கணன்று நான்
நெஞ்சுமரிக்கும் நாளில்
எனக்கென உன்னுள்
துளிர்க்கும் கண்ணீர்துளி காண
லாடம் கட்டப்பட்ட முகமூடி
காத்திருக்கிறது -
உயிர்மட்டும் இல்லாமல்....


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக