சனி, 28 ஆகஸ்ட், 2010

கொடுக்கு...



உனக்கெனவே காத்திருந்து
வெளிறிப்போன
அர்த்தமற்ற நொடிகளில்...

உன்
உன்னதப் பார்வைக்கென
ஏங்கிப் பறிதவித்த
நுட்ப வினாடிகளில்...

துடிப்புகளில்
சமிக்ஞை உணர்ந்து
இடம்பெயரும்
உதிரத்துளிகளிடையே
ஒவ்வொரு துடிப்பினிடையேயும்
உயிர் கொல்லும்
வன்ம வலி....

அதோ
அருகில் நெருங்கிவிட்டாய்..
இடைவிடாது மார்பிலறைந்து
அழும் மனது...
அதிகரிக்கிறது துடிப்பு...

ஒவ்வொரு துடிப்பிற்கும்
இடையில் அந்த
நெடுடல்மிக்க வலியைத்
தெளிவாக உணரமுடிகிறது...

சிற்சில வினாடிகள்
மூச்சை முழுக்க இழுத்து
வலியைத் தேக்கிக்கொள்கிறேன்...

நீ கடக்கிறாய்..
உன் ஸ்பரிசம்
மெல்லக் கரையக்கரைய
இழுத்தடிக்கப்பட்ட மூச்சு
மீண்டும் அந்த
இயல்பான
மரண வலிக்குள் தன்னை
இழுத்துக்கொ(ல்)ள்கிறது...

மென்மையாக
இதயத்தின் இரும்புக்கதவுகளை
எப்படியோ நெம்பி
நுழைந்திருக்கிறது
உன் காதல் கொடுக்கு...


வெண்பா...

அமிழ்தெனும் நஞ்சா யிதயத்துள் காதல்
நிமிண்டி நுழைந்த கொடுக்கு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக